பொழுதுபோக்கு

சூப்பர் சிங்கர் பாடகி ப்ரித்திகா..! நிஜ பாடகி ஆனார்….!!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர் பிரித்திகா. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவரான பிரிதிக்கா தனது கனத்த குரலால் பலரையும் கவர்ந்து 40 லட்ச ரூபாய் பரிசையும் தட்டி சென்றார்.

அதன் பின்னர் மேடைப் பாடகியாக சிறு சிறு நிகழ்ச்சிகளில் பாடி வந்த பிரித்திகா முதன் முறையாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பரியேரும் பெருமாள். கதிர் மற்றும் ஆனந்தி இந்த திரைப்படத்தில் நாயகன் நாயகியாக நடித்து இருக்கிறார்கள்.

மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின், ரயில் விட போலாமா எனும் பாடலைதான் சூப்பர் சிங்கர் ப்ரிதிக்கா சந்தோஸ் நாராயணின் இசையில் பாடி இருக்கிறார். இந்த பாடலின் உருவாக்க வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker