கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி : தொடரை வென்றது இந்தியா !!

ஐதராபாத்(அக்டோபர் 15): ஐதராபாத் மைதானத்தில் அக்டோபர் 12-ஆம் நாள் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் தொடர் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் இருஅணிகளுக்கு இடையே டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தது.

மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் ஆட்டம் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த நிலையில், மேற்கிந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவு அணியின் வீரர் ரோஸ்டன் சேஷ் ஆட்டத்தில் தடுமாறி வந்த நிலையிலும் 106(189) ரன்கள் எடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர்.

அதே போல அந்த அணியின் மற்றொரு வீரர் ஜாசன் ஹோல்டர் 52(92) ரன்கள் எடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் இந்திய அணி வீரர்கள் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீர்ர்கள் ஆட்டத்தை சிறப்பாக விளையாடினர். இந்திய அணி வீர்ர் KL ராகுல் 4(25) ரன்களில் வெளியேற பிரித்வி ஷா 70(53) ரன்கள் குவித்தார்.

அடுத்த படியாக கோலி 45(78) ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர்.இறுதிவரை நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இந்தியா அணி 106.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker