தமிழகம்
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் 7 பேருக்கு பிரேத பரிசோதனை நடந்துள்ளது: அதிகாரி
தூத்துக்குடி: 11 பேரின் உடல்களில் இருந்த குண்டுகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவ கல்வி இயக்குநரான டாக்டர் எட்வின் ஜோ தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புபவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் செல்லலாம், ஆனால் 49 பேரும் இங்கேயே சிகிச்சையை தொடருவதாக கூறியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில், இதுவரை 7 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 11 பேரின் உடல்களில் இருந்த குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது என்றும் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.