தமிழகம்

தொடர் பதற்றத்தில் தூத்துக்குடி… இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு

சென்னை: தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூட கோரி ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளிக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்ற வித்தியாசம் ஏதும் பார்க்காமல் குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த படுகொலையை காணும் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் 2-ஆவது நாளாக நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டார். அதன்படி இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டு கிடந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker