தமிழகம்

வா, வா., பள்ளிக்கு வா – மாணவர்களுக்கு மேள, தாளத்துடன் வரவேற்பு

மானாமதுரை: பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து ஆசிரியர்கள் மேள தாளத்துடன் வரவேற்றனர். இந்த சம்பவம் மிக தூண்டுதலாக இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டையில் உள்ள எம் கே என் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த ஆண்டு முதல் வகுப்பில் 26 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர் . இன்று அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் சிரியர்கள், நிர்வாகத்தினர், மேள தாளத்துடன் மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வற்றனர்.

குழந்தைகள் உற்சாகம்

முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதில் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் மிக உற்சாகமாவும், குதூகலத்துடனும் காணப்பட்டர். இது போன்ற நிகழ்வுகள் வரவேற்கப்பட வேண்டியதே என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

ஏன் நடத்துகிறோம் ?

இது குறித்து தலைமையாசிரியர் சிவகுருநாதனிடம் பேசியபோது: ” நான் கடந்த 1971 முதல் 79 வரை இந்த பள்ளியில் படித்தேன், 1993 ல் இந்த பள்ளிக்கே ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2001 ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றேன்.

பள்ளியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டவும், பள்ளிக்கு வரும் குழந்தைகள் மனம் பாதிக்க கூடாத அளவிற்கு இருக்க வேண்டும் என இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அரசு பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் ” என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker